articles

img

18ஆம் நூற்றாண்டில் கள்ள நோட்டுகள் தடுப்பு

       அமெரிக்கா பிரிட்டனின் காலனி நாடாக இருந்த காலத்தில் பெஞ்சமின் பிராங்க்ளின் என்கிற நிறுவனம் பத்திரிகைகளையும் காலநிலைகளை காட்டும் பஞ்சாங்கங்களையும் அச்சிடுவதோடு அரசாங்கத்திற்கு காகித பணத்தையும்  அச்சிட்டு தந்து கொண்டிருந்தது. கள்ள நோட்டு அடிப்பதை தடுப்பதற்காக ஒளியை பிரதி பலிக்கக்கூடிய மைக்காவையும் நீலநிற கோடு ஒன்றையும் பண நோட்டிற்குள் புகுத்தியிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த இயற்பியல் வேதியாளர்  கச்சட்டூர் மனுக்யான் மற்றும் அவரது குழுவினர் பழைய ரோமானிய நாணயங்கள், மத்திய கால கையேடுகள் மற்றும் பிற புராதான பொருட்களை அணுக்கரு பிம்ப தொழில்நுணுக்கம் மூலம் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் இந்த காகித பணத்தையும் ஆய்வு செய்தனர்.  அகச்சிவப்பு, எலெக்ட்ரான் எனர்ஜி லாஸ் நிறமானி, எக்ஸ்ரே ஆய்வு போன்றவற்றை பயன்படுத்தி அக்கால காகித பணத்தினுள் வண்ண நூல்கள், உலோகப் படிவம் ஆகியவை புகைத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். நீல நிற கோடுகள் சாதாரண கண்களுக்கு புலப்பட்டது. மைகா ஒளியை பிரதிபலித்தன. இவற்றை கள்ள நோட்டு தயாரிப் பவர்களால் உண்டாக்க முடியவில்லை. இந்த ஆய்வில் பிராங்ளின் நிறுவனம் நோட் அச்சடிக்க பயன்படுத்திய  மையில் கிராபைட் கலந்திருந்ததும் தெரியவந்துள்ளது. மற்ற ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்திய மையில் எலும்பை எரித்து கிடைக்கும் வேதிப்பொருட்களான பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிக அளவில் கலந்திருந்தன.

     கள்ள நோட்டு தயாரிப்பவர்கள்  இதை போல செய்ய கற்றுக் கொண்டார்கள். இந்த நுணுக்கங்களை அறிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசும் அமெரிக்க புரட்சியின்போது கள்ள நோட்டுகளை அச்சிட்டு அமெரிக்க காலனி எங்கும் இறைத்தனர். இதனால் அமெரிக்க பணத்தின் மதிப்பு சரிந்தது. ஆகவே புரட்சிக்குப் பின் அமெரிக்கா உலோக நாணயங்களுக்கே முன்னுரிமை அளித்தனர். பின்னால் நடந்த போர்க்காலங்களில் மட்டுமே காகித நோட்டுகளை அச்சிட்டனர். ‘கிராபைட்டை மையில் முதலில் பயன்படுத்தியது பிராங்க்ளின் அல்ல; கிராபைட்டின் வரலாற்றுப் பெயரான கருப்பு ஈயம் 18ஆம் நூற்றாண்டு மை தயாரிப்பு குறிப்பில் உள்ளது. பிராங்ளின் அதை  கண்டுபிடிக்கவுமில்லை. பிரதானமாக கள்ள நோட்டு தயாரிப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தியிருக்க முடியாது. கிராபைட்  குறித்து படித்த அவர், அதில் சோதனைகள் செய்து பொதுவாக மையின் தரத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி யிருப்பார்’ என்கிறார் பாஸ்டனிலுள்ள வட கிழக்கு பல்கலைக் கழகத்தை சேர்ந்த வரலாற்றாளர் ஜெஸ்ஸிகா லிங்கர். இருந்தாலும் கை தேர்ந்த  கள்ள நோட்டு தயாரிப்பா ளர்களை தடுப்பதில் பயன்படும் நுட்பமான முறைகளுக்கு பிராங்ளினின் நுணுக்கங்களே அடிப்படையாக உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் அந்த முறைகளை மேம்படுத்தி புதிய நோட்டுகளை அடிக்கும்போதெல்லாம் பயன்படுத்தப் பட்டது என்கிறார் மானுக்யான்.